தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: 621, பலி: 6 ஆக உயர்வு

சென்னை : தமிழகத்தில், மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 6 ஆனது.
சென்னையில் நிருபர்களை சந்தித்த சுகாதார செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது :
வீட்டுக்கண்காணிப்பில் இருப்பவர்கள்: 91,851 பேர்
அரசின் தனிமை முகாம்களில் இருப்பவர்கள்: 205 பேர்
1,475 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் பரவியுள்ளது. இன்று மட்டும் 50 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 48 பேர் டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவர். இவ்வாறு அவர் கூறினார்.